"நேற்றைய இரவு (31.12.2008). புத்தாண்டை வரவேற்க அத்தனை விழிகளும் ஆவலாய் விழித்துக் கொண்டிருந்த இரவு.
மற்ற இரவுகளுடன் சற்றே முரண்படும் இரவு.
புத்தாண்டு தொடங்கி அரை நிமிடம் வரை மட்டும் அந்த இரவு வானில் வண்ண மணிச்சிதறல்களாய் எத்தனை வான வேடிக்கைகள்.
வண்ணங்கள் சிதறும் வன்ன வானம்.
அந்த வன்ன வானுக்கு ஒரு சின்னக் கவிதை".
ஒளித்துளிகள் சிதறுவதால் வானிலிந்த வண்ணமென்றார் - அதில்
பனித்துளியின் சிதறல்களோ மின்னுமிந்த விண்மீன்கள்
ஒளித்துளிகள் தான்சிந்தி மின்னும்விண் மீன்களொடே - வண்ண
மணிச்சிதறல் போலழகு பொழியும்வான் வேடிக்கை
தனித்தனியாய் சிதறுகின்ற எழிற்றுளிகள் சேர்ந்ததனால் - இங்கே
தனிச்சிதறா அழகெடுத்தப் புத்தாண்டுப் பொன்வானம்.
- இராஜகுரு
4 comments:
புத்தாண்டு வாழ்த்துகள் ராஜகுரு :)
இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்.
பிரேம்குமார், ஈழவன் இருவருக்கும் மிக்க நன்றிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
கவிச்சுவையை உண்டு களித்தேன் வாழ்த்துகள்.
Post a Comment